இந்தியாவில் தூய்மையான காற்று கொண்ட நகரம் இதுதான்!. நம்ம சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

clean air india cities 30kb

‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026’ (Swachh Vayu Sarvekshan 2026) ஆய்வின்படி, தற்போது இந்தியாவில் லக்னோ தூய்மையான காற்று கொண்ட நகரமாகத் திகழ்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் இது 198 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் நொய்டா 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்கள் முறையே 32, 35 மற்றும் 38-வது இடங்களைப் பிடித்துள்ளன.


கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் 200-க்கு 200 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்த இந்தூர், இந்த ஆண்டு 197 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. ஜபல்பூர் 195 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், போபால் மற்றும் ஆக்ரா ஆகியவை தலா 192 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன.

10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முதல் 10 தூய்மையான நகரங்கள் பட்டியலில், லக்னோ, இந்தூர், ஜபல்பூர், போபால், ஆக்ரா, சூரத், ராய்ப்பூர், தானே, சண்டிகர், ராஜ்கோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முதல் 10 நகரங்கள் பட்டியலில் ரூர்கேலா, ஃபிரோசாபாத், குண்டூர், அமராவதி, புவனேஸ்வர், ஜான்சி, அல்வார், லாத்தூர், மொராதாபாத், நொய்டா (8வது இடம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதேபோல், 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட முதல் 10 நகரங்கள் பட்டியலில், நல்கொண்டா, கலிங்கா நகர், அங்கூல், தல்செர், ஏலூர், ஹால்டியா, விஜயநகரம், தேவாஸ், சங்கரெட்டி, தம்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

PM10 என்பது 10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்ணிய துகள்களைக் குறிக்கிறது. வாகனப் புகை, சாலைத் தூசி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் இத்துகள்கள் சுவாசிக்கும்போது மனிதர்களின் சுவாச மண்டலத்திற்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.

‘ஸ்வச் வாயு சர்விக்சன்’ கட்டமைப்பின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் முக்கிய அளவீடுகளில் PM10 அளவைக் குறைப்பதும் ஒன்றாகும். இந்தூர் நகராட்சித் தரவுகளின்படி, இந்த ஆண்டு நகரின் சராசரி ஆண்டு PM10 அளவு ஒரு கன மீட்டருக்கு சுமார் 81 மைக்ரோகிராம்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளை விட 15% அதிகமாகக் குறைந்திருந்தாலும், குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கான தேசிய காற்றுத் தர நிர்ணய வரம்பான (NAAQS) 60 மைக்ரோகிராம்களை விட அதிகமாகவே உள்ளது.

காற்று தர குறியீடு (AQI) அளவீடுகள்:

0 – 50: நன்று (Good)

51 – 100: திருப்தி (Satisfactory)

101 – 200: மிதமானது (Moderate)

201 – 300: மோசம் (Poor)

301 – 400: மிகவும் மோசம் (Very Poor)

401 – 500: ஆபத்தான நிலை (Severe)

இந்தூர் நகரின் AQI மதிப்பீட்டுக் காலத்தில் 98% நாட்களுக்கு மேல் சராசரியாக 200-க்கும் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

காது, மூக்கு அறுக்கப்பட்டு கிடந்த மூதாட்டியின் சடலம்..!! கவரிங் நகையால் ஏமாந்து போன கொள்ளையர்கள்..!! கடலூரில் திடுக்கிடும் சம்பவம்..!!

Wed Sep 9 , 2026
கடலூரில் சாலையோர வீட்டு வாசலில் படுத்துறங்கிய 70 வயது மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்தது கவரிங் நகை என தெரிந்ததும் உடலை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா (70) என்ற மூதாட்டி, கடந்த சில ஆண்டுகளாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள நகைக்கடைகளின் வெளியே சாலையை சுத்தம் செய்யும் […]
Crime 2026 1

You May Like