சற்று முன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்! கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளுடன் தாயும் ரயில் முன் பாய்ந்து உடல் சிதறி பலி!

கிருஷ்ணகிரியைச் சார்ந்த தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சார்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அம்மு என்பவருக்கும் திருமணம் ஆகி இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த குடும்ப சச்சரவுகளின் காரணமாக மிகவும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார் அம்மு.


இதனைத் தொடர்ந்து தனது வாழ்வை முடித்துக் கொள்ள முடிவெடுத்த அம்மு தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்த மூன்று பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தன் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser5

Next Post

"பாவம்...... பாட்டி"! ஒரே நேரத்தில் படையெடுத்த 20 குரங்குகள்! கடித்து குதறியதால் பரிதாபமாக 70 வயது பாட்டி பலி!

Mon Mar 6 , 2023
தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி இவர் தனது சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது இவரது வீட்டிற்குள் நுழைந்த […]
IMG 20230306 WA0055

You May Like