இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டி!. எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

eps campagin

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இத்துடன் முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார். இதனால் தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக். 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான விருப்ப மனு இன்றுமுதல் 3 நாட்கள் விநியோகிக்கப்படும். போட்டியிட விரும்புவோர் இன்றுமுதல் 10ம் தேதிக்குள் விருப்பமனுவை தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

1newsnationuser5

Next Post

அடேங்கப்பா... ரூ.2000 கோடி ஊழலா?. சிக்கிய எ.வ.வேலு!. பேரவையை அதிரவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!. நடந்தது என்ன?

Tue Sep 8 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற விவாதங்களின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கிய உடனேயே, திமுக கொறடா ஈ.வி.வேலு, திங்களன்று விஜய் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, அவை விதிகளை மீறுவதாகக் கூறி, அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டிருந்த குறிப்புகளை சட்டமன்ற […]
aadav arjuna vs E.V.velu

You May Like