நேபாளத்தை மீண்டும் நெருங்கி வரும் பேரழிவு..!! இன்னும் 3 நாட்களில் உடையும் ஏரி..!! சீனா பகிரங்க எச்சரிக்கை..!!

Nepal 1

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் இந்த ஏரிக்குள் வந்து சேரும் என கணிக்கப்பட்டுள்ளதால், ஏரியின் கரை உடைந்து கீழ்நோக்கிப் பாயும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திபெத்தில் உற்பத்தியாகும் சோச்சென் மற்றும் புருபு ஆகிய நதிகள் நேபாள எல்லைக்குள் நுழையும் சங்கமப் பகுதியில் இந்த ஏரி உருவாகியுள்ளது. இந்நதிகள் நேபாளத்தில் ‘போதேகோசி ஆறு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற திரிசூலி ஆற்றுடன் இணைகின்றன.

நேபாளத்தின் ரசுவா மாவட்டம், திமுர் மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் கோர வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்து, நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில், இந்த புதிய தடுப்பு ஏரி அச்சுறுத்தல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏரி உடைந்தால் கீழ்நோக்கிப் பாயும் காட்டாற்று வெள்ளம் கரையோர குடியிருப்புகளையும் கட்டமைப்புகளையும் மீண்டும் புரட்டிப் போடும் என்பதால், முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, செயற்கைக்கோள் மற்றும் வெள்ள மாதிரி ஆய்வுகள் மூலம் இந்த ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : போதைப்பொருள் பழக்கத்தை தடுக்க.. இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அந்த மெசேஜ்..!!

Next Post

வளர்ப்பு பிராணிகளை தவிர.. உங்கள் வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்? ஆன்மிக சாஸ்திரம் சொல்வது என்ன?

Fri Aug 28 , 2026
நம் முன்னோர்களின் ஆன்மீக சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின்படி, சில குறிப்பிட்ட பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் தானாகவே நமது வீட்டிற்குள் வருவது சுப சகுனங்களாகவும், வரவிருக்கும் நன்மைகளின் அடையாளங்களாகவும் பார்க்கப்படுகின்றன. வளர்ப்பு பிராணிகள் அல்லாமல், இயல்பாகவே இந்த உயிரினங்கள் வீட்டிற்குள் நுழைவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அந்த வகையில், வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் சுப காரியங்கள் கைகூடும் என்றும், வெட்டுக்கிளி வந்தால் பண வரவு […]
Home 2026 1 e1787839712367

You May Like