இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]
உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena). 90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக […]
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், ஒரு புதிய ஆய்வு இதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. லான்செட் பொது சுகாதாரம் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தினமும் குறைந்தபட்சம் 7,000 படிகள் நடந்தாலே போதும்.. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்கள் வரும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7,000 படிகள் என்பது, பலராலும் அடையக்கூடிய ஒரு யதார்த்தமான […]
பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின்படி, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற பொருட்களுக்கு 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளில் மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிக […]
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளம்பெண் ஒருவர், அழகுக்கலை நிபுணராக உள்ளார். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர் தனது அழகுக்கலை பயிற்சி தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், காட்பாடி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (30) என்பவர் அந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு பழகியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது. அப்போது, இளம்பெண்ணும் […]
40 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பின்பற்ற, உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரபல சித்த மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், 40 வயதிற்கு மேற்பட்டோரின் முதல் மற்றும் முக்கியமான எதிரியாக கருத வேண்டியது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்கள் தான். முன்பு கொழுப்பு தான் உடல்நலப் பிரச்சனைக்கு காரணம் என்று நம்பப்பட்டாலும், தற்போது உலகளாவிய மருத்துவர்கள் கார்போஹைட்ரேட் அதிகப்படியான நுகர்வுதான் பெரும்பாலான உடல்நலப் […]
சமையலுக்கு மணமூட்டும் ஒரு சாதாரண பொருளாகக் கருதப்படும் கிராம்பு, உண்மையில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு கதவுகளை திறக்கும் சாவியாக செயல்படுகிறது. கிராம்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கிராம்பு எண்ணெய், ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மகத்தான மருத்துவ ரகசியங்களை உள்ளடக்கியது. கிராம்பு எண்ணெய்யின் நன்மைகள் : * கிராம்பு எண்ணெயில் உள்ள முக்கியக் கூறு யூஜெனோல் (Eugenol) ஆகும். இது நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயல்படும் வலி நிவாரணியாக பயன்படுவதால், பல் வலிக்கு […]
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் […]
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை […]

