தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார்.
நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் சிறந்த பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லை என்று தெரிவித்த அவர், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
Also Read:சென்னையில் இலவச WiFi..! 44 இடங்களில் வசதி தொடக்கம்.. முழு லிஸ்ட் இதோ..!



