fbpx

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்….! திடீரென்று கையும் களவுமாக பிடித்த பெற்றோர் இறுதியில் அந்த நபருக்கு என்ன நடந்தது தெரியுமா….?

வீட்டில் யாரும் இல்லாமல், தனியாக இருந்த சிறுமிக்கு வட்டி பணம் வாங்க வந்த நபர் பாலியல் தொல்லை வழங்கியதால், மறைந்திருந்த பெற்றோர், அவரை கையும், களவுமாக பிடித்து, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தைச் சேர்ந்த சுரேஷ் அந்தோணிராஜ்(37) என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் சென்னை புறநகர் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஆகவே நாள்தோறும் காலையில் சென்று, அவரிடம் வட்டி பணம் வசூல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், வட்டிப்பணத்தை வசூலிக்க அவருடைய வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் பெற்றோர் இல்லாததால், 12 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

ஆகவே சுரேஷ் அந்தோனிராஜ், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியிருக்கிறார். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் பெற்றோர் வீட்டில் மறைந்திருந்தனர். அப்போது, சுரேஷ் அந்தோணி ராஜ் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சி செய்தார்.

அப்போது வீட்டில் மறைந்திருந்த சிறுமியின் பெற்றோர், சுரேஷ் அந்தோணி ராஜை கையும், களவுமாக பிடித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். மேலும், அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா எங்க மேலயே மோதுவ….? பிரியாணி வாங்குவதற்காக சென்ற இளைஞர் வெட்டி படுகொலை சென்னை அருகே பயங்கர சம்பவம்….!

Tue Aug 22 , 2023
சென்னை அருகே பிரியாணி வாங்குவதற்காக கடைக்கு சென்ற ஒரு இளைஞர் எதிரே வந்த நபர் மீது மோதியதால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணூர்பேட்டையில், மதுபான கடை அருகே இருக்கின்ற ஒரு பிரியாணி கடைக்கு கொரட்டூர் பகுதியை சேர்ந்த பாலா என்ற நபர் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்குவதற்காக அயனாவரத்தைச் சேர்ந்த நெப்போலியன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். இதில், நெப்போலியன் […]

You May Like