fbpx

எல்.கே.ஜி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா.!போக்ஸோவில் கைது.!

ஆவடி பகுதியில் நான்கு வயது பெண் குழந்தை இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அக்குழந்தையின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

ஆவடியைச் சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் இவருக்கு திருமணமாகி பதினோரு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.

தினமும் வேலைக்குச் செல்லும் அப்பெண் தனது மகளை தனது அக்காவின் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். பணி முடித்து வரும்போது மகளையும் கூட்டிக் கொண்டு வந்து விடுவார். சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் தனது மகளை வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார்.

இரவில் வெகு நேரமாகியும் குழந்தை தூங்காமல் அழுது கொண்டே இருந்திருக்கிறது. அப்போது விசாரித்ததில் அந்தப் பெண்ணின் பெரியப்பா, குழந்தையிடம் தவறான பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அந்தக் குழந்தையின் பெரியப்பாவான 53 வயது ரபிக் என்ற ராஜ்குமார் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Baskar

Next Post

அம்மாவுக்கு பிடித்த பேயால்.. கர்ப்பமான சிறுமி.. நாகர்கோவிலில் அதிர்ச்சி.!

Tue Jan 31 , 2023
நாகர்கோவில் அருகே பேய் விரட்டும் மந்திரவாதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவிலில் வடசேரியை அடுத்துள்ள மேலகலுங்கடி பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதிகளில் மாந்திரீக வேலைகளை செய்து வருவதாக மக்களிடம் கூறி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். நாகர்கோவிலை சார்ந்த 55 வயது கூலி தொழிலாளி ஒருவர் தன் மனைவியை இவரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறார். இதற்காக […]

You May Like