fbpx

சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை! காவல்துறை விசாரணை !

சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் இவர் சென்னையில் உள்ள ஐஐடியில் பி ஹெச் டி ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார் . இவர் தனது நண்பர்களுடன் வேளச்சேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர் . இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற இவர் உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீடு திரும்பியிருக்கிறார் . அவருடன் படிக்கும் மற்ற மாணவர்கள் மாலையில் வீடு திரும்பிய போது சச்சின் குமார் ஜெயின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சச்சின் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவருடைய நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையை ஐஐடியில் சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஐஐடியில் தொடர்கதையாக இருந்து வருகிறது.

Baskar

Next Post

காலேஜ் சீனியருடன் காதல்! கர்ப்பம் கலைக்க முடியாததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு !

Sun Apr 2 , 2023
கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் வீட்டிற்கு பயந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காடு கண்ணகி வீதியைச் சார்ந்தவர் குமார் இவரது மனைவி மஞ்சுளா இந்த தம்பதியினரின் மகளான ஸ்வேதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு […]

You May Like