விக்கிரவாண்டியை அடுத்துள்ள லட்சுமிபுரம் தனியார் கல்லூரி பகுதியில் ஒரத்தூர் கிருஷ்ணகுமார் என்பவரது நிலத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் இதனை குறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக்முருகன் எனபவர் சம்பவ இடத்திற்கு சென்று தலை மற்றும் உடலில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினார்.
அதில், இறந்தவர் விழுப்புரம் வி மருதூர், கொடித்தெருவை சேர்ந்த முருகன், 59; என்பதும் அவர் மாடு மேய்த்து வருபவர் என்பதும் தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.