அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.
நான்கு முறை அமலாக்கத்துறையிடமிருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், கொச்சியில் கைது செய்யப்பட்ட அசோக்குமாரை இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.