fbpx

Breaking News: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அதிரடி கைது….!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.

நான்கு முறை அமலாக்கத்துறையிடமிருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், கொச்சியில் கைது செய்யப்பட்ட அசோக்குமாரை இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Next Post

மக்களே மூன்று நாட்களுக்கு வங்கிகளுக்கு தொடர் விடுமுறை…..! வங்கி வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டீர்களா…..?

Sun Aug 13 , 2023
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் வங்கி தொடர்பான வேலைகளை அதற்குள் முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் எந்தெந்த தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது? என்பது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதோடு, எதிர்வரும் நாட்களில் நிச்சயமாக […]

You May Like