fbpx

5 புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்…! மத்திய சட்ட அமைச்சர் அறிவிப்பு…!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பங்கஜ் மித்தல் நியமனத்தை அறிவித்தார். அதேபோல பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பி வி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா; மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..!! 40,000 காலியிடங்கள்..!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

Sun Feb 5 , 2023
நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர், அஞ்சல் உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் 40,889 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எவ்வித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், […]

You May Like