fbpx

மக்களே..! இன்று காஞ்சிபுரம்‌ உட்பட 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று வேலூர் உட்பட 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைபெய்யும்‌. விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, தர்மபுரி, வேலூர்‌, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, சேலம்‌, நாமக்கல்‌,கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும்‌ என வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது. திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 20,21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Vignesh

Next Post

நோட்...! வரும் ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் கூட்டம்...! வெளியான அறிவிப்பு...!

Sun Jun 18 , 2023
ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் […]

You May Like