fbpx

மாஸ்..! இன்று முதல் ஜூலை 25-ம் தேதி வரை முதலமைச்சர்‌ கோப்பை…! மொத்தம் 27,000 வீரர்கள் பங்கேற்பு…!

இன்று முதல் ஜூலை 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என தமிழக அரசு ஏற்கனவே அளித்தது. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ மூன்று இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்திற்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ கலந்து கொண்டனர்‌. மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 27,000-க்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌. வீராங்கனைகள்‌ மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்‌. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ சார்பில்‌ சென்னையில்‌ 17 இடங்களில்‌ இன்று முதல்‌ ஜுலை மாதம்‌ 25-ம் தேதி வரை முதலமைச்சர்‌ கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில்‌ பங்கேற்கவுள்ள 27,000க்கும்‌ மேற்பட்ட வீரர்‌-வீராங்கனைகள்‌,பயிற்றுநர்கள்‌, நடுவர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ தேசிய மாணவர்‌ படை தன்னார்வலர்கள்‌ அனைவருக்கும்‌ போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும்‌ தங்குவதற்குஸவசதியாக தனியார்‌ விடுதிகள்‌ மற்றும்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை ஆகியவைகளில்‌ 2000க்கும்‌ மேற்பட்ட அறைகள்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரூ.20 குறைவான சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய தடை!... மத்திய அரசு அதிரடி!

Sat Jul 1 , 2023
ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக் கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இறக்குமதி இலவசம் என்ற கொள்கை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லைட்டரின் சிஐஎஃப் […]

You May Like