fbpx

சூப்பர் அறிவிப்பு…! தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மக்கள் மருந்தகம்…! மத்திய அரசு அனுமதி…!

மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இம்மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவைச் சிகிச்சை உபகரணங்களும் இதில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Vignesh

Next Post

சோளத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?... இதனை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்!

Fri Jun 9 , 2023
சோளம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாட்டில் வகாரி, ஜோவர், ஜோலா, ஜோன்தலா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் சோளத்தை குறிப்பிடுகிறார்கள். இதனை வைத்து ரொட்டி, தோசை ஆகிய உணவு வகைகளை தயாரித்து உண்ணலாம். இந்தியாவில் பஞ்சம் நிலவியப்போது சோளம் தான் பலரின் பசியை போக்கியது. சோளம் உண்பதால் உடலுக்கு தேவையான நிறைய புரதச்சத்து கிடைக்கும். ஆனால் எல்லா சோளத்தையும் நம்மால் உண்ண முடியாது. கிட்டத்தட்ட […]

You May Like