நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியை, சேர்ந்த கலியபெருமாள் என்ற இளைஞர், மனைவி இருக்கும்போதே மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது மாமியார் மீது ஏற்பட்ட அதீத மோகம் காரணமாக, மாமியார், மருமகன் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை கலியபெருமாளின் மனைவி ஹேமாஸ்ரீ கண்டித்துள்ளார்.
ஆனாலும், தன்னுடைய ஆசை நாயகியான மாமியாரை அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக, நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு, தினமும் ஹேமாஸ்ரீயை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கலியபெருமாளின் மனைவி, ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டார்.
அதன்படி தன்னுடைய தம்பியுடனும், தன்னுடைய நண்பரோடும் சேர்ந்து, தன்னுடைய கணவனை கொடூரமான முறையில் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார் ஹேமாஸ்ரீ. இதன் பின்னர், இந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கலியபெருமாளின் உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு வந்து விட்டனர். இந்த நிலையில், தண்டவாளத்தில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விரைந்து வந்து, அவருடைய உடலை மீட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து, விசாரணையை தொடங்கினர். அதாவது உயிரிழந்து கிடந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையின் முடிவில், உயிரிழந்து கிடந்தது கலியபெருமாள் தான் என்ற விவரம் தெரிய வந்தது.
அதன்பிறகு ஹேமாஸ்ரீயின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் காவல்துறையினர் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில், அவர், தன்னுடைய கணவர் தன்னுடைய தாயின் மீது மோகம் கொண்டு, அவருடன் கள்ள தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னை துன்புறுத்தி வந்ததையும், மேலும் அவர் குடிக்கு அடிமையானவர் என்பதையும், தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய தொந்தரவு தாங்க முடியாமல், தானே, தன்னுடைய நண்பனுடனும், சகோதரருடனும் சேர்ந்து, அவருடைய தலையை வெட்டி கொலை செய்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, ரயில் தண்டவாளத்தில் உடலை போட்டு விட்டதாக வாக்குமூலம் வழங்கினார். இதனை தொடர்ந்து, கலியபெருமாளை கொலை செய்த மூவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.