fbpx

ஆசைவார்த்தை கூறி உடலுறவு..!! சிறுமிகள் பலாத்காரம்..!! இனி மரண தண்டனை..!! புதிய மசோதா சொல்வது என்ன..?

இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் என 3 வகைகளாக இருக்கின்றன. இந்த சட்டங்கள் அடிப்படையில் தான் போலீசார், மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனைகள் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த 3 சட்டங்களின் பெயர்களை மாற்றவும், சட்டப்பிரிவுகளில் புதிய வரையறைகள், விதிகளை சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. அதன்படி, இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து தற்போதைய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் இந்த 3 சட்ட மசோதாக்களிலும் திருத்தம் செய்து மீண்டும் லோக்சபா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நடந்த நிலையில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தான் புதிய 3 சட்ட திருத்த மசோதாக்கள் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், லவ் ஜிஹாத் போன்ற அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த மசோதாக்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொய்யான வாக்குறுதிகள் வழங்கி பெண்ணுடன் உடலுறவு வைப்பது, பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டுவதற்கு உண்மையான அடையாளத்தை மறைப்பது உள்ளிட்டவை கிரிமினல் குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், தவறான வாக்குறுதிகளை அளித்து பெண்ணுடன் உடலுறவு வைப்பது, பழகுவது உள்ளிட்டவையும் கிரிமினல் குற்றம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு திருமணம் செய்வதாக கூறி ஆண் தன்னை ஏமாற்றிய பலாத்காரம் செய்ததாக பெண்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தன. முந்தைய இந்திய தண்டனை சட்டத்தில் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பிரத்யேகமான வரையறை என்பது இல்லை. ஆனால், புதிய மசோதாவில் அதற்கான பிரத்யேக வரையறை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கூட்டு பலாத்கார வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த நபர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதா வாய்ப்பு வழங்குகிறது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியான துன்புறுத்தினால் அவர்களுக்கான தண்டனை மரண தண்டனை வரை நீட்டிப்பு செய்யவும் பரிந்துரை செய்கிறது.

Chella

Next Post

நெடுஞ்சாலையில் மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை நிர்ணயம்...! மத்திய அமைச்சர் தகவல்..!

Fri Dec 22 , 2023
நெடுஞ்சாலைகளில் வேக வரம்புக்குள் வாகனம் ஓட்டாவிட்டால் அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகள். மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் பிரிவு 112-ன் படி, அமைச்சகம் ஏப்ரல் 6, 2018 தேதியிட்ட அரசாணை 1522 (இ) மூலம் இந்தியாவில் வெவ்வேறு சாலைகளில் இயங்கும் பல்வேறு வகை மோட்டார் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை நிர்ணயித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 -ன் பிரிவு 183 -ல் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால் அபராதம் […]

You May Like