குளிர்காலத்தில் தண்ணீர் குளிராக இருப்பதால் பலரும் வெந்நீரில் குளித்து வருகின்றனர். ஆனால் இப்படி குளிப்பது முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சூடான தண்ணீரை தலையில் ஊற்றுவது பல தீமைகளை உடலில் ஏற்படுத்தும்.
1. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது சூடான தண்ணீரை தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகி முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
2. மேலும் இதனால் முடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான நிறமியை அழித்து முடி வெள்ளை நிறமாக மாறுகிறது. இது போன்ற பிரச்சினைகளால் குளிர்காலத்திலும் வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் வெந்நீரில் குளிப்பதற்கு பதில் வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.