ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்ற மாதம் 27ஆம் தேதி அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் துரதிஷ்டவசமாக சென்ற வாரம் அவருக்கு XBB வகை நோய்த்தொற்று பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்வதற்கு முடியாமல் அவதிக்குள்ளானார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இதன் பின்னர் அவர் உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த சூழ்நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நோய் தொற்றிலிருந்து குணமடைந்து நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சமீபத்தில் அவர் வீடியோ மூலமாக தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழ்நிலையில், இன்று மறுபடியும் அவர் ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.