fbpx

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஜோவிகா..? உறுதி செய்த வனிதா..!! நடந்தது என்ன..?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்களை முடித்து இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

இவ்வாறு 60 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளபக்கமொன்றில் திடீர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் ‘என்னது ஜோவிகா அவுட்டா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த பதிவில், ‘நீங்க தோல்வியுற்றால் நம்பிக்கையை ஒருபோதும் கை விடாதீர்கள்.. ஏனென்றால், FAIL என்பதற்கு அர்த்தம் அது கற்றலில் முதல் முயற்சி என்பதாகும். முடிவு என்பது முதலல்ல. அத்துடன் உங்களுக்கு NO என்று பதில் கிடைத்தால் அது அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பு என எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் மனநிலையை மாற்றுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்டில் இறுதியாக காணப்பட்ட ஜோவிகா எவிட் ஆகியுள்ளார் என்பதை யூகிக்க முடிகிறது.

Chella

Next Post

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி..! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!

Thu Nov 30 , 2023
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி தெலுங்கானா ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து சந்திரசேகா்ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.) கட்சி இரண்டு முறை ஆட்சி செய்து வருகிறது. அங்கு […]

You May Like