fbpx

கந்துவட்டிக் கொடுமை….! ஒரு மாதம் வட்டி கட்டாததால், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர் இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் வாங்கிய 10000 ரூபாய் கடனுக்காக, வட்டி கேட்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், உள்ள நாகவுர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக பல பகுதிகளில் கடன் கேட்டார், ஆனாலும், கிடைக்கவில்லை. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த மொஹ்ரதின் என்பவரிடம் வட்டிக்கு 10,000 ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அந்த 10,000 ரூபாய் கடனுக்காக, மாதம் 1000 ரூபாய் வட்டியை செலுத்தி வந்தார்.

மேலும் அந்தப் பெண் வாங்கிய கடனில் 5000 ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டார். மீதம் உள்ள கடனுக்காக, மாதந்தோறும், 500 ரூபாய் வட்டியை கட்டி வந்தார். ஆனால், ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதம் ஆனதன் காரணமாக, உடனடியாக கடன் கொடுத்தவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர், அதனை தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவாக எடுத்துக் கொண்டார்.

பின்பு, அந்த வீடியோ பதிவை வைத்து, அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு, அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஆனாலும், திடீரென்று ஒரு நாள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அந்த நபர் வெளியிட்டு விட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், குளத்தில் குதித்து, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனாலும், அந்த பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர்.

பின்னர், அந்த பெண், இந்த விவகாரம் குறித்து, காவல்துறையிடம் புகார் வழங்கினார், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, அந்த இளம்பெண் தன்னுடைய புகாரில், கடன் கொடுத்த நபர் வட்டி கேட்டு தொடர்ந்து, சித்திரவதை செய்து வந்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து, மேலும் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து, அந்த நபரை கைது செய்து, விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Next Post

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.26.75 கோடி சம்பளம் வாங்கும் பிரபலம்..!! விராட் கோலி எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா..?

Fri Aug 11 , 2023
இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி, இந்தாண்டு வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அவர் புகைப்படம் மற்றும் வீடியோ பிளாக்கிங் தளமான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக இருக்கிறார். விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுக்கும் […]

You May Like