கேரளாவின் அரபி பாடசாலையில் மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய மதரசா ஆசிரியருக்கு 67 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது அதிவிரைவு நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சொர்ப்புள சேரி என்ற பகுதியை சார்ந்தவர் ரஷீத் வயது 49. இவர் அங்குள்ள அரபி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இவரிடம் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் சந்தேகம் கேட்பதற்காக இவரது அறைக்கு சென்று இருக்கிறான். அப்போது ரஷீத் அந்த மாணவனை மிரட்டி அவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பாவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அந்த மாணவனின் பெற்றோர். இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை ஆசிரியர் ரசீதை கைது செய்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. குன்னங்குளம் அதிவேக கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரசீதுக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 67 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கல்வி நிலையங்கள் மற்றும் மத பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் அந்த ஆசிரியர்களை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் என தெரிவித்த நீதிபதி அவர்களின் மீது எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது எனவும் கூறினார்.