தேசிய செய்திகள்

  • இதை செய்யவில்லை எனில் அங்கீகாரம் ரத்து.. 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய UGC..

    ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது

    2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ராகிங் தடுப்பு ஆன்லைன் உறுதிமொழிகளைச் சமர்ப்பிப்பதில் மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிமீறலில் ஈடுபட்டதாக யுஜிசி தெரிவித்துள்ளது. பல ஆலோசனைகள், UGC ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைனின் அழைப்புகள் மற்றும் ராகிங் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், இந்த பல்கலைக்கழகங்கள் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பல்கலைக்கழகங்கள் 30 நாட்களுக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து மாணவர்களும் தங்கள் ஆன்லைன் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழிகளைச் சமர்ப்பிப்பதை உடனடியாக உறுதிசெய்யவும். ராகிங் தடுப்பு இணக்க அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யவும். தங்கள் வளாகங்களில் ராகிங் செய்வதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

    காலக்கெடுவிற்குள் இணங்கத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. அதன்படி இந்த பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் யுஜிசி மானியங்கள் மற்றும் நிதியை திரும்பப் பெறப்படலாம்… யுஜிசி வலைத்தளத்தில் இந்த பல்கலைக்கழக ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும். சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம்.

    நோட்டீஸ் அனுப்பப்பட்ட முக்கிய நிறுவனங்கள்

    நாளந்தா பல்கலைக்கழகம் (மத்திய பல்கலைக்கழகம், பீகார்)

    ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு

    எய்ம்ஸ் ரேபரேலி

    இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூர் மற்றும் ரோஹ்தக்

    இந்திய புள்ளிவிவர நிறுவனம், கொல்கத்தா

    டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், லக்னோ

    இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்

    அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

    சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தமிழ்நாடு

    தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER), ஹைதராபாத்

    ஆந்திரப் பிரதேசம், பீகார், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள பல அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் இதில் அடங்கும்.

    மாணவர் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியது என்றும், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ராகிங் எதிர்ப்பு கட்டமைப்பை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் UGC செயலாளர் பேராசிரியர் மணீஷ் ஆர். ஜோஷி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ராகிங் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதது மாணவர்களின், குறிப்பாக புதியவர்களின் பாதுகாப்பு மற்றும் மன நலனை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த விதிகளை பின்பற்ற தவறிய நிறுவனங்களுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சகத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் யுஜிசி தெரிவித்துள்ளது.

    Read More : ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இறுதி பயணிகள் அட்டவணை 24 மணி நேரத்திற்கு முன்பே வெளியாகும்..

சினிமா 360°

உலகம்

  • AI தடை முதல் பயோமெட்ரிக் அடையாளம் காணல் வரை.. ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்த சீனா..!! ஷாக் ஆகாம படிங்க..

    சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன.

    AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை (Gaokao) எழுதும் மாணவர்கள் சிலர், தேர்வில் வந்த கேள்விகளை தங்கள் மொபைலில் படம் எடுத்து, AI செயலிகளில் பதில் கேட்டுள்ளனர். ஆனால், AI செயலிகள் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை.

    அதற்கு பதில் அந்த AI செயலிகள், “இது பல்கலை நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் காலம்… இப்போது கேள்வி-பதில் (Q&A) வசதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. நியாயமான தேர்வை உறுதி செய்யும் நோக்கத்தில்தான் இந்த முடக்கம்” என்று பதில் அளித்தது. அதேபோல், DeepSeek என்ற பிரபலமான உருவாக்க நுண்ணறிவு (Generative AI) கருவியும், ஏற்கெனவே தேர்வுக் காலத்தில் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    சீனாவின் Gaokao என்ற நுழைவுத் தேர்வு என்பது மிக முக்கியமானது. இதில் தேர்ச்சி பெறுவதுதான் பல மாணவர்களுக்கு உயர் கல்விக்கான முதல் படியாக அமையும்.
    அதனால், இதுபோன்ற தேர்வுகளில் யாரும் நியாயமில்லாமல், ஏமாற்றம் ஏற்படாமல் எழுத வேண்டும் என்பதற்காக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    AI கேமரா: தேர்வு எழுதும் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசுகிறார்களா? மேலோட்டமாக யாரையாவது பார்க்கிறார்களா? ஏதேனும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடத்தை காட்டுகிறார்களா? இதை தானாகவே அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய கமெராக்கள், தேர்வுகள் நடைபெறும் கூடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கமெராக்கள் மாணவர்களின் நடத்தை, முக சாயல், கண் பார்வை போன்றவற்றை தொடர்ந்து கவனித்து, சந்தேகமான செயல்களை கண்டதும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனே தகவல் அளிக்கின்றன.

    பயோமெட்ரிக் அடையாளம் காணல்: சில மாணவர்கள் மாற்றாக வேறு ஒருவரை தேர்வு எழுத அனுப்பக்கூடிய மோசடிகள் ஏற்படக்கூடும். அதைத் தடுப்பதற்காக, மாணவர்கள் தேர்வுக்குள் நுழைவதற்கு முன்பு முகம், விரல்தடம் போன்ற உடல் அடையாளங்களைச் சோதிக்கப்படும். இதன்மூலம் அந்த மாணவர் உண்மையில் அவர் தானா என்பதை உறுதி செய்கிறார்கள்.

    ரேடியோ சிக்னல் தடுப்பு கருவிகள்: சில மாணவர்கள், மொபைல், புளூடூத், சிம்கார்ட் சாதனங்கள் போன்றவற்றை ரகசியமாக பயன்படுத்தி வெளியிலிருக்கும் ஒருவரிடமிருந்து பதில்கள் பெற முயற்சி செய்யலாம். இதைத் தடுக்க, தேர்வுக் கூடத்தில் ரேடியோ ஜாம்மர் (Radio Jammer) எனப்படும் கருவிகளை பயன்படுத்துகிறார்கள். இது அந்த இடத்தில் மொபைல் நெட்வொர்க், Wi-Fi, புளூடூத் போன்ற அனைத்து சிக்னல்களையும் முடக்கி விடும்.

    டிஜிட்டல் சாதன பரிசோதனைகள்: தேர்வுக்கு வருவோர் செல்போன், Smartwatch, Earbuds போன்ற சாதனங்களை எடுத்துச் சென்றாலா? அவற்றில் ஏதேனும் படங்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், எழுத்துக் கோப்புகள் உள்ளதா? என்பதை சோதிக்க டிஜிட்டல் பரிசோதனைகள் (Device Scanners) பயன்படுத்தப்படுகின்றன.

    சீன அரசு இந்த Gaokao தேர்வை மிகவும் கடுமையான ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்புடன் நடத்துகிறது. மாணவர்கள் முயற்சி, திறமை மற்றும் நேர்மையால் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    Read more: நடிகர் மம்மூட்டி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்..!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக […]

UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]

திமுகவை சேர்ந்த ஆண்டிப்பட்டி எம் எல் ஏ மகாராஜன் மகளிர் இலவச பேருந்தை பெண்களின் ஓசி பஸ் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் […]

ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது 2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் […]

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, இன்று வரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரளாவில் 2223 கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக […]

தாஜ்மஹாலின் 22 பூட்டிய அறைகள் பற்றி தெரியுமா? இந்த அறைகள் ஏன் பல ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டுள்ளன? இதுகுறித்து தற்போது பார்க்கலாம். உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அதன் அழகு மற்றும் கட்டிடக்கலைக்காக போற்றப்படுகிறது.. அதன் பிரமிக்க வைக்கும் வெள்ளை பளிங்கு மற்றும் பிரபலமான காதல் கதையைத் தவிர, மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் பல ரகசியங்களையும் இது கொண்டுள்ளது. தாஜ்மஹாலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று அதன் அடித்தளத்திற்குள் […]