நாடு முழுவதிலும் சமீப காலமாக காய்ச்சல் சளி, இருமல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது இன்புளுயன்சா ஹச் 3 என் 2 என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவது தான் இதற்கு காரணம் என்று இந்திய மகத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்து இருக்கிறது.
ஆகவே இதனை கட்டுப்படுத்தும் விதத்தில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மாநிலம் முழுவதும் வரும் 10ம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 200 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறும்.
காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. காய்ச்சல் முகாம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தேவைக்கேற்ப நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வாக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.
இது குளிர்காலம் மற்றும் பருவமழை காலம் நிறைவடையும் போது உண்டாகும் வழக்கமான காய்ச்சலாகும். உடல் வலி தொண்டை வலி இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் இதன் அறிகுறிகள். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் இருப்பவர்கள் தவறாமல் இந்த முகாமை பயன்படுத்தி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.
இந்த முகாம்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக மக்கள் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, தனிமனித இடைவேளையை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
ஆகவே வரும் 10ம் தேதி அன்று மக்கள் எல்லோரும் முகாம்களில் பரிசோதனை செய்து தேவை இருந்தால் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.