மனிதர்களுக்கு அனைத்து விதமான உணர்ச்சிகளும் இருக்கும் ஆனால் அதில் எந்த உணர்ச்சி அதிகரித்தாலும் அதன் காரணமாக மனிதர்கள் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட நிலைமை விவரம் அறிந்த நபர்களுக்கு ஏற்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு இது போன்ற கொடூரமான தண்டனை தேவைதானா என்று தான் யோசிக்க தோன்றுகிறது.
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்து சிறுமி தவித்து வந்திருக்கிறார்.
ஆனால் இதனை முதலில் சாதாரண உடல்நிலை பாதிப்பு தான் என்று நினைத்து அந்த வெகு நாட்கள் போன பிறகும் உடல்நிலை சீராகாததால், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நடந்த சோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததால், அதிர்ச்சிக்குள்ளாகிப் போயினர் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போதுதான் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடைய தந்தை தான் என்று அந்த சிறுமி ஒரு அதிர்ச்சிக்குள்ளான தகவலை தெரிவித்தார். அதாவது, அந்த சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற பிறகு தந்தை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக அந்த சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து காவல்துறையிடம் புகார் வழங்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அந்த சிறுமியின் தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் இந்த வழக்கு தொடர்பான விபரத்தை தெரிந்து கொண்ட அந்த சிறுமியின் தந்தை தப்பி சென்று தலைமறைவாகி இருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.தந்தையே தன்னுடைய மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.