தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • “ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்காக இல்ல.. அதை விட பெரிய விஷயம்..” புதிர் போடும் ட்ரம்ப்..

    ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதற்கும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம், இன்னும் தாமதமாவதற்கு முன்பு ஈரான் பேசி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். ஜி7 உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இஸ்ரேலை ஆதரித்து பேசினார். டெல் அவிவ் மீதான போரில் ஈரான் வெற்றி பெறாது”என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய ட்ரம்ப் “ கனடாவில் நடந்த ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதற்கும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அதே நேரம், அதை விட மிகப் பெரிய விஷயத்திற்காக நான் முன்கூட்டியே வெளியேறினேன்..” என்று அவர் கூறினார்.

    தனது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸையும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பையும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பக்கூடும் என்று ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு உண்மையான தீர்வை அடைய விரும்பினாலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் இல்லை. நான் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானை அணுகவில்லை..

    ஈரான் அமெரிக்காவுடன் பேச விரும்பினால், என்னை எப்படி அணுகுவது என்பது அவர்களுக்குத் தெரியும். மேசையில் இருந்த அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தை ஈரான் எடுத்திருக்க வேண்டும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 5வது நாளை எட்டியுள்ளது, இரு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்திய நிலையில், மேற்கு ஈரானில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் கூறியுள்ளது. அதே போல் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் சுமார் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 592 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இன்று நடந்த தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இதனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்து. ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபர் என்று இராணுவம் அவரைக் குறிப்பிட்டது.

    இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “திடீரென கிடைத்த ஒரு வாய்ப்பைத் தொடர்ந்து, (இஸ்ரேலிய விமானப்படை) தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஒரு பணியாளர் கட்டளை மையத்தைத் தாக்கி, போர்க்காலத் தலைமைத் தளபதியும், மிக மூத்த இராணுவத் தளபதியுமான அலி ஷத்மானியை அழித்ததாக” தெரிவித்துள்ளது.

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோயினாகவும்் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும்; அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி படம்தான் கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி ஹீரோயினாகவும் கலக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழில் […]

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பிறகு, ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் குதிக்கும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து மாணவர்கள் குதித்துள்ளனர். பதைபதைக்க […]

‘கருப்பு பணம்’ என்ற பேச்சு வரும்போதெல்லாம், முதலில் நினைவுக்கு வரும் பெயர் சுவிஸ் வங்கி. இந்தியாவில், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் தங்கள் சட்டவிரோத வருமானத்தை சுவிஸ் வங்கிகளில் மறைப்பது பெரும்பாலும் விவாதப் பொருளாகும். ஆனால் கேள்வி என்னவென்றால், சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணம் ஏன் ‘கருப்பு பணம்’ என்று அழைக்கப்படுகிறது? அங்குள்ள பணம் அனைத்தும் சட்டவிரோதமா? சுவிஸ் வங்கிகளை மற்ற வங்கிகளிலிருந்து வேறுபடுத்துவது ஏன்..? என்பதுதான்.. […]

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதிக்கப்படாத விதத்தில் சொத்துக்கள் குவித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு எதிராக CBI வழக்குப்பதிவு செய்தது.. 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, […]

பழங்கள் மற்றும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறோம். உணவுப் பொருட்களை இப்படி குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதா? குளிர்சாதன பெட்டியில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மசாலாப் பொருட்கள்: பலர் மசாலாப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அவை நீண்ட காலம் நீடிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கும் காலாவதி […]