விபத்துகள் ஏற்படுவது என்பது சில சமயங்களில் எதிர்பாராத ஒன்று, சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என பல விதமாக பிரிக்கலாம். அந்த வகையில், அமெரிக்காவில் இந்தியருக்கு ஒரு சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஸ்வசந்த் கோலா இவர் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நாட்டில் உள்ள போசன் விமான நிலையத்திலிருந்து தன்னுடைய நண்பரை அழைத்து வருவதற்காக சென்று உள்ளார்.
அங்கே அவர் பி வாயிலில் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அந்த கார் அருகிலேயே நின்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பேருந்து ஒன்று அவர் மீது மோதி இருக்கிறது இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.