இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
இந்த நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் ஆரம்பமானது இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பானிசும் நேரில் கண்டு களித்து வருகிறார்கள். இந்த நிலையில் மைதானத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் மைதானத்திற்கு வந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மைதானத்திற்குள் சிறப்பு வாகனத்தில் வந்த இருநாட்டு பிரதமர்களும் அரங்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு கைது அசைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஸ்மித் உள்ளிட்டோருக்கும் இருநாட்டு பிரதமர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.