கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (28) இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு பொள்ளாச்சியை அடுத்துள்ள டி கோட்டாம் பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கின்ற இவருடைய மனைவி பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இத்தகைய சூழ்நிலையில், நேற்று இடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி (20) என்பவர் இருக்கின்ற தன்னுடைய ஆண் நண்பர் விஜய் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி இருக்கிறது. இந்த தகராறு காரணமாக, சுஜய் சுப்புலட்சுமியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மகாலிங்கபுரம் காவல்துறையினர் சுப்புலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மகாலிங்கபுரம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதற்கு நடுவே தலைமறைவாக இருந்த சுஜய்யை காவல்துறையினர் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர். அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.