fbpx

கனடாவிற்கு சென்ற காதலியை வரவழைத்து கொலை செய்த காதலன்! விசாரணையில் வெளியான பகிர் தகவல் !

ஹரியானா மாநிலம் சோனி பட்டில் கனடா சென்ற காதலியை திருமணம் செய்வதாக கூறி இந்தியாவிற்கு வரவழைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த பெண்மணியின் காதலர் சுனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சரியான மாநிலம் தோணிப்பட்டை சார்ந்தவர் சுனில் வயது 26 . இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுனில் என்பவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மோனிகாவிற்கு கனடாவில் படிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் மேற்படிப்பிற்காக கனடா சென்று இருக்கிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் மோனிகா வை திருமணம் செய்வதாக கூறி இந்தியாவிற்கு வரவழைத்திருக்கிறார் சுனில். அவர்கள் இருவரும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் செய்துள்ளனர்.

ஜனவரி மாதம் இந்தியா வந்த மகள் மே மாதத்திலிருந்து தொடர்பு இல்லாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் ஹரியானா மாநில காவல் துறையில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறது காவல்துறை . இதனைத் தொடர்ந்து ஹரியானா மாநில உள்துறை அமைச்சரிடம் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் விசாரணை செய்த சிபிஐ மோனிகாவின் காதலரான சூழ்நிலை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் தனது பண்ணை வீட்டில் வைத்து காதலியை கொலை செய்து உடலை அங்கேயே புதைத்ததும் தெரிய வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது துப்பாக்கியால் சுட்டு தன்னுடைய காதலி மோனிகாவை கொலை செய்து இருக்கிறார் சுனில். இதனைத் தொடர்ந்து சுனிலின் பண்ணை வீட்டிற்கு சென்ற காவல்துறை அங்கு புதைக்கப்பட்டிருந்த அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது . மேலும் மோனிகாவின் தாயின் உதவியுடன் டி என் ஏ பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது.

Baskar

Next Post

பணம் கொடுக்கல் வாங்கல் சண்டை! சொந்த அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தனார்!

Thu Apr 6 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சொந்த அண்ணியை கொலை செய்த வழக்கில் கொழுந்தனாரை காவல்துறை தேடி வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரகோட்டை பகுதியைச் சார்ந்தவர் கோபிநாதன் இவரது மனைவி சுலோக்சனா வயது 65. இந்த தம்பதியினருக்கு விந்தியா என்று மகள் இருக்கிறார்.கோபிநாதன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சுலோக்சனா […]

You May Like