TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
தமிழ்நாட்டில் கோவில்கள் அதிகமாக உள்ள ஒரு நகரம் என்றால் அது கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு செல்லும் பக்தர்கள், தங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சிக்கல்கள், தோஷங்கள் எல்லாம் அகல பிரார்த்தனை செய்கிறார்கள். கும்பகோணத்துக்கு “தேவாரத் திருத்தலங்கள்”, “நவகிரக கோவில்கள்”, மற்றும் பல சக்தி ஸ்தலங்கள் உள்ளதால், இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது “கோவில் நகரம்” என்ற வண்ணம் மட்டுமல்ல; இது நவகிரகங்களை பிரதிபலிக்கும் […]
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கியமான விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி, அரசு இனி ஓய்வுபெற்றவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற பிற நிதி உதவிகளை (அகவிலைப்படி உயர்வு, புதிய ஊதியக் குழுவின் சலுகைகள்) கிடைக்காது. இனி 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அகவிலைப்படி (DA) உயர்வுகள் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், 1972ல் வந்த […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 18 வயதுக்குட்பட்ட அந்த சிறுமி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு மர்ம நபர், தன்னை நடன பயிற்சியாளர் என சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமிக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமியும் அதனை நம்பி, நடனம் கற்றுக் கொள்ளும் ஆசையில், அந்த நபரின் காரில் […]
இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இன்றைய காலகட்டத்தில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு பைக் மற்றும் கார் நிறுவனங்களும், அவற்றின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக்கை அடுத்த ஆண்டில்(2026) அறிமுகம் செய்ய உள்ளது. அதன் […]
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். இந்த இளைஞர், கடந்த 2021ஆம் ஆண்டு நொய்டாவை சேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு வருமாறு அந்தப் பெண்ணை அவர் அழைத்துள்ளார். பின்னர், அங்கு ஒதுக்குப்புறமாக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, அவருக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து […]
மாம்பழம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கோடைகாலத்தில் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று மாம்பழம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதை விரும்புகிறார்கள். இருப்பினும், அதிகமாக உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாம்பழங்களை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்ப்போம். மாம்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. மாம்பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் அதிக அளவு மாம்பழங்களை […]
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளையரசன் என்பவர், ஃபிங்கர் என்ற கடன் செயலி மூலம் ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து உரிய நேரத்திலும் இளையரசன் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனால், பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் இளையரசனை தொடர்பு கொண்டு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை இளையரசன் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, இளையரசனின் புகைப்படத்தை, அந்த […]
மத்திய அரசின் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (The New India Assurance) நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 500 கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியமாகும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க […]
தாய்லாந்தில் உள்ள ‘டைகர் கிங்டம்’ எனும் விலங்குப் பூங்காவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது திடீரென தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பார்வையாளர்களின் பாதுகாப்பு, மற்றும் விலங்குகளை சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக பயன்படுத்தும் நடைமுறை குறித்து பலரிடையே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்திய பயணிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்றும், அவருக்குத் […]