தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும் ஒன்றிணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் இருக்கின்ற வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றுக் கொண்டு பணியாட்களை தேர்வு செய்ய இருக்கின்றன. இந்த முகம் மூலமாக பணி நியமனம் பெரும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் பங்கேற்றுக் கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.