fbpx

வாஷிங்மிஷினால் வந்த வினை! தந்தை மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்!

இப்போதெல்லாம் எதற்கு தான் கொலை செய்வது என்ற ஒரு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதனுக்கு தன்னுடைய கோபம் தான் முதல் எதிரி என்பார்கள், அப்படி இரண்டு நபர்கள் கோபப்பட்டதால் இன்று ஒரு குடும்பமே நாசமாகிவிட்டது.

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கதிரியை அடுத்த மாசனம் பேட்டையைச் சார்ந்தவர் மனோகர். இவர் ஒரு நடன இயக்குனர் ஆவார்.இவருடைய மனைவியின் பெயர் பத்மாவதி இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய அண்டை வீட்டில் வசித்து வருபவர் வேமாநாயக் அவருடைய மகன் பிரகாஷ்.

’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

இந்தநிலையில் தான் மனோகரின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பொதுவழி இருந்துள்ளது. அந்த தெருவில் இருக்கின்ற யாராக இருந்தாலும் எல்லோருக்குமே இது பொதுவான வழியாகத்தான் இருந்துள்ளது. அந்த விதத்தில் இந்த வழியாகத்தான் வேமாநாயக் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டுமாம்.

ஆனால் இது பொதுவழி என்று கூட நினைக்காமல் பத்மாவதி இந்த வழியில் துணி துவைக்கும் இயந்திரத்தை வைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. அந்த துணி துவைக்கும் இயந்திரம் எல்லோருக்குமே நடந்து செல்வதற்கு மிகப்பெரிய இடையூறாக இருந்து வந்திருக்கிறது.

’தம்பி காப்பாத்து’..!! அக்காவுக்கு லவ் டார்ச்சர்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர்..!!

இதுகுறித்து வேமா நயக்குக்கும் , பத்மாவதிக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொது வழியில் வாஷிங்மெஷின் வைத்து துணி துவைப்பதால் தங்களுக்கு போக்குவரத்தில் சிரமம் இருப்பதாக வேமா நாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மனோகரின் குடும்பத்திடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததும், ஆனாலும் மனோகர் அந்த வாஷிங்மெஷினை அப்புறப்படுத்தாமலே இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் காலை மனோகர் தன்னுடைய மகளுடன் நடன வகுப்புக்கு போய்விட்டார். அப்போது பத்மாவதி தன்னுடைய வாஷிங்மெஷினை நடுவழியில் வைத்து துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக மீண்டும் இரு குடும்பத்தினரிடையே தகராறு உண்டாகி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் கொண்ட வேமாநாயக் மற்றும் அவருடைய மகன் பிரகாஷ்நாயக் உள்ளிட்ட இருவரும் அருகில் கிடந்த கற்களை எடுத்து பத்மாவதியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

’அவரு போய்டாரு... இப்போ நீ வரலாம்’..!! கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்த பெண்..!! கடைசியில் நேர்ந்த கதி..!!

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பத்மாவதி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அப்போதும் கோபம் குறையாத வேமா நாயக் வீட்டிற்குள் இருந்த கத்தியை எடுத்து வந்து பத்மாவதியின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு வேமா நாயக்கும், அவருடைய மகனும் அந்த பகுதியிலிருந்து தப்பிசென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த மனோகரின் இளைய மகள் தன்னுடைய தந்தை மனோகரை தொலைபேசியில் அழைத்து, இங்கு நடந்தவற்றை விவரித்துள்ளார். உடனடியாக மனோகர் விரைந்து தன்னுடைய வீட்டிற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவதியை இணைத்து கதிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லும் வழியில் பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கதிரி காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகிறார்கள்.

Next Post

கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால்..? ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக்..!!

Thu Dec 8 , 2022
கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை எப்போதும் தனக்கு ஏராளமான அன்பையும் ஆதரவையும் அளித்திருக்கிறது. […]
கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால்..? ருதுராஜ் கெய்க்வாட் ஓபன் டாக்..!!

You May Like