தேசிய செய்திகள்

  • அயோத்தியில் கோலாகலம்!. பளிங்கு சிம்மாசனத்தில் ராமர்-சீதா!. ராமர் தர்பாரின் உருவப்படங்கள் வெளியானது!.

    அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ராம தர்பார் (Ram Darbar) உருவங்களின் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூன் 5 அன்று, கங்கா தசமி பண்டிகையை முன்னிட்டு, கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம தர்பார் மற்றும் ஏழு பிற கோயில்களில் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

    உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த விழாவில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர். அதேசமயம், எஞ்சிய கட்டுமானப் பணிகள் கோவிலில் முழுவீச்சில் நடந்து வந்தன. கோவில் சுவர்களில் இடம்பெறக்கூடிய ராமாயண கதைகளுக்கான சுவரோவியம் தவிர இதர பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து, கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள எட்டு கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

    இதற்கான யாகசாலை பூஜைகள் மற்றும் சடங்குகள் கடந்த 3ம் தேதி துவங்கின. ராமர் பிறந்த, ‘அபிஜித் முகூர்த்தம்’ எனப்படும் நெருக்கடி மற்றும் தடைகளை அகற்றும் நேரமான காலை 6:30 மணிக்கு, எட்டு கோவில்களின் விக்ரகங்களுக்கு ஒரே நேரத்தில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலின் முதல் தளத்தில், வேத மந்திரங்கள் முழங்க ராம ராஜ்ஜியத்தை பிரதிபலிக்கும் ராம தர்பாருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    ராமருடன் சீதாதேவி சிம்மாசனத்தில் எழுந்து அருளியுள்ள நிலையில், லட்சுமணன், பரதன் மற்றும் ஹனுமன் ஆகியோர் ஒன்றாக உள்ள சிலை இடம்பெற்றுள்ளது. ராமரின் அவதாரமான சேஷ அவதாரம், சிவன், விநாயகர், ஹனுமன், சூரிய கடவுள், பகவதி தேவி மற்றும் அன்னபூர்ணா தேவி விக்ரகங்கள் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    கோவில் கருவறை கோபுரம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பார் வளாகத்தில் ராஜா ராமர், சீதை மற்றும் அனுமன், லட்சுமணன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த சன்னதி முழுக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வெள்ளை பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. ராஜா ராமர், சீதை சிலைகள் பளிங்கு சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருகே அனுமன், லட்சுமணன் சிலைகள் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் கோவில் வளாகத்தில் மேலும் 7 புதிய கோவில்கள் கட்டப்பட்டு சிலைகள் நிறுவப்பட்டன.

    ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வின் போது ராமர் தர்பாரின் முதல் படம் வெளியிடப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலின் முதல் தளத்தில் கும்பாபிஷேக சடங்குகளுக்கு முன்னதாக, ராம் தர்பாருக்கு முன்பு முதல்வர் பிரார்த்தனை செய்தார். இந்த நிகழ்வையொட்டி, ராமர் கோயில் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டது.

    அயோத்தியில் உள்ள கோயிலின் முதல் தளத்தில் உள்ள ராமர் தர்பார் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதால், நாடு முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். ராமர், மாதா ஜானகி மற்றும் ஹனுமான் சிலைகள் ராமர் தர்பாரில் நிறுவப்பட்டுள்ளன.

    Readmore: Tn Govt : கிராம உதவியாளர் தேர்வு… ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் தேர்வு நடத்த தேவையில்லை…!

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு […]

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ராம தர்பார் (Ram Darbar) உருவங்களின் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூன் 5 அன்று, கங்கா தசமி பண்டிகையை முன்னிட்டு, கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம தர்பார் மற்றும் ஏழு பிற கோயில்களில் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட […]

இந்திய அரசால் தமிழ் மொழியை செம்மொழியாய் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 19ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக […]

கிராம உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் […]

சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த […]

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று அதிகளவில் […]

இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]

கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]

பலர் உட்கார்ந்து வேலை செய்யும்போது, படிக்கும்போது அல்லது டிவி பார்க்கும்போது தங்களது கால்களை ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி கால்களை ஆட்டுவதைப் பார்த்தால் திட்டுவார்கள். உண்மையில், உட்காந்திருக்கும்போது கால்களை ஆட்டுவது ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது. கால்களை ஆட்டுவது ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா..? உண்மையில், நம்முடைய உடலானது ஒரு எப்போதும் செயல்பாட்டில் […]