தேசிய செய்திகள்

  • ஏர் இந்தியா விமான விபத்து.. 242 பேரில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

    இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

    அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 11A என்ற சீட்டில் இருந்த விஸ்வாஸ் என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். இவர் பிரிட்டன் குடியுரிமை வைத்திருப்பவர் என்றும், இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கிவிட்டு லண்டன் சென்ற போது விபத்தில் சிக்கி உள்ளார். எனினும் அவருக்கு கழுத்து, கண், பாதங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த விமானம், இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா விமானம் சம்பந்தப்பட்ட துயரமான விமான விபத்தில் கணிசமான எண்ணிக்கையிலான உயிர்கள் உயிரிழந்ததை வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.

    வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசிய போது, “அகமதாபாத்தில் நடந்தது மிகவும் துயரமான விபத்து. நாம் நிறைய பேரை இழந்துவிட்டோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல வெளிநாட்டினர் உள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. சரியான விவரங்கள் வெளிவர இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்…” என்று தெரிவித்தார்.

    ஏர் இந்தியா விமானம் விபத்து :

    இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர்.

    ஏர் இந்தியா தனது ‘X’ பக்கத்தில் “ அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ‘ஏர் இந்தியா AI 171’ விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள், கனடா நாட்டை சேர்ந்த ஒருவர், போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த 7 பேர் இருந்தனர். அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில், 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் நாங்கள் அமைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

    சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்குமுழு ஒத்துழைப்பையும் அளிப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது..

    Read More : ஏர் இந்தியா விமான விபத்துக்கு இது தான் காரணம்.. ஆனா அதை இப்ப உறுதிப்படுத்த முடியாது.. நிபுணர்கள் தகவல்..

சினிமா 360°

உலகம்

  • பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் அமெரிக்கா.. ஜெனரல் அசிம் முனீருக்கு திடீர் அழைப்பு..!! இந்தியாவுக்கு சிக்கல்..?

    வாஷிங்டனில் நடைபெறும் அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாஷிங்டனின் அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்கத் தலைநகரில் சனிக்கிழமை நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் முனீர் கலந்து கொள்ள உள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளும் கூட. முனீர் தனது பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவ அதிகாரியான ஜெனரல் மைக்கேல் குரில்லா, பாகிஸ்தானை வெளிப்படையாக பாராட்டிய சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபைசல் முனீர் அமெரிக்கா பயணம் மேற்கொள்வது கவனிக்கத்தக்கது. அமெரிக்க உயர்மட்ட ராணுவ அதிகாரியான (CENTCOM) ஜெனரல் குரில்லா, சமீபத்தில் பாகிஸ்தானை “பயங்கரவாத எதிர்ப்பு உலகில் ஒரு தனித்துவமான கூட்டாளி” என புகழ்ந்தார்.

    அதே நேரத்தில், “அமெரிக்கா இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் உறவை விரிவாக்க விரும்புகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒருவருடனான நெருக்கமான உறவு, மற்றொருவரை தவிர்க்கும் நிலை ஏற்படுத்தக் கூடாது” என்றும் அவர் எச்சரிக்கை அளித்தார்.

    இந்நிலையில், பிரபல தெற்காசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் ஒரு ட்வீட்டில், “CENTCOM அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இடையே உறவுகள் நிலைத்துவந்துள்ளன. முனீர் ஜெனரல் குரில்லாவுடன் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது, பாகிஸ்தானுடன் அமெரிக்காவின் இராணுவ ஆதார உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் ஒரு சூழலை காட்டுகிறது.

    பாகிஸ்தான்-அமெரிக்கா நெருக்கம் மீண்டும் தொடருமா?

    பாகிஸ்தானுக்கு ஜெனரல் அளித்த ஆதரவும், முனீரின் வரவிருக்கும் பயணமும், அமெரிக்கா தனது பழைய சமநிலைப்படுத்தும் செயலுக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. சீனாவுடனான வளர்ந்து வரும் முரண்பாடுகளை எதிர்கொள்ள, இந்தியாவையும் பாகிஸ்தானையும் அதன் சுற்றுப்பாதையில் வைத்திருக்க விரும்புகிறது.

    தனது முதல் பதவிக் காலத்தில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இஸ்லாமாபாத்தை டிரம்ப் கடுமையாக சாடினார், மேலும் அதன் மண்ணில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படத் தவறியதற்காக பில்லியன் கணக்கான உதவிகளை நிறுத்துவதாகவும் அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், முனீருக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பு இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதை “இந்தியாவிற்கு மற்றொரு பெரிய இராஜதந்திர பின்னடைவு” என்று அழைத்தார்.

    பாகிஸ்தான் புலம்பெயர் போராட்டக்காரர்கள்: பாகிஸ்தான் தளபதியின் வாஷிங்டன் வருகை அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி, ராணுவத் தளபதியின் வருகையின் போது அமெரிக்க தலைநகரில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளது.

    இந்த அரசாங்கத்துடனான எந்தவொரு ஒப்பந்தமும் பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை வெள்ளை மாளிகைக்குத் தெரியப்படுத்துங்கள் என்று பிடிஐயின் வெளியுறவுச் செயலாளர் சஜ்ஜாத் புர்கி ட்வீட் செய்துள்ளார். ஜூன் 14 அன்று வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டத்தில் பாகிஸ்தான்-அமெரிக்கர்கள் கலந்து கொள்ளுமாறு புர்கி வலியுறுத்தினார்.

    Read more: நெல் கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகளுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 11A என்ற சீட்டில் இருந்த விஸ்வாஸ் என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். […]

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டபோது நேரில் பார்த்த அப்பகுதி இளைஞர் ஒருவர் அதிர்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். இன்று 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். […]

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளது. கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன.. மேடே அழைப்பு எப்தெல்லாம் பயன்படுத்தடும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 7878 (விமானம் AI171) புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் இருந்து மேடே அழைப்பு விடுக்கப்பட்டது. […]

இன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதனால் அங்கிருந்த […]

2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]

அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தற்போதைய தகவலின்படி இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட […]

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை […]