உப்பளத் தொழிலாளர்களுகான நிவாரண திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்..
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட நெய்தல் உப்பு என்ற பெயரில் வெளிச்சந்தைக்கு உப்பு விற்பனை திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. பின்னர் உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5000 நிவாரண உதவி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
உப்பு உற்பத்தி இல்லாத வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் உப்பள தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவிப்பது வழக்கம்.. அவர்களது குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.. அதன்படி 5 உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்..