ரோகினி ஐஏஎஸ் இன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலியான சசிகலா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது அவருக்கு சலுகைகளை செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் டி ரூபா. தற்போது இவர் கர்நாடக கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி என்பவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி கர்நாடக அறநிலையத் துறையின் இயக்குனராக பணியில் இருக்கிறார். இவர் மீது ஊழல் மற்றும் சில அவதூறுகளை பரப்பி இருக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா. இது தொடர்பாக புகார் அளித்துள்ள அவர் ரோகினி தனது அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி இருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் புகைப்படங்களை தமது முகநூல் மற்றும் whatsapp போன்றவற்றின் மூலமும் பகிர்ந்திருக்கிறார் டி ரூபா. தனது புகைப்படங்களை நான் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களை மயக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் ரூபா. மேலும் இது ஆட்சிப் பணிகளின் சட்ட விதிகளுக்கு எதிரானது அதை ஐஏஎஸ் அதிகாரி ரோகினி மீறி இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபோக ஜே டிஎஸ் கட்சியைச் சார்ந்த எம் எல் ஏ ஒருவருடன் உணவகம் ஒன்றில் ரோகினி இருக்கும் காட்சிகளையும் வீடியோ பதிவாக வெளியிட்டு இருக்கிறார் ரூபா. இது கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரோகினி ஐஏஎஸ் அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என தெரிவித்துள்ளார். தன் மீது இருக்கும் பகையின் காரணமாக தேவையில்லாத விஷயங்களை குரூப்பா பகிர்ந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ரோகினி. மேலும் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிற்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பதிலடி கொடுத்திருக்கிறார் ரோகினி ஐஏஎஸ். இரண்டு பேருமே தங்களது ஆட்சிப் பணியின் விதிகளை மீறி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடகாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் விரைவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பொம்மை தெரிவித்துள்ளார்.