fbpx

மாணவியை வன்புணர்வு செய்த பள்ளியின் இயக்குனர் கைது.! செல்போன் முழுவதும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்.!

புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், கடந்த ஜனவரி 30ஆம் தேதி, 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதாகும் இந்த இயக்குனருக்கு, அதே நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவி ஒருவரும் துணை புரிந்திருப்பது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2021ஆம் ஆண்டு, ரூ.2.26 லட்சம் செலுத்தி அந்த மாணவியின் தந்தை அந்த கல்வி நிறுவனத்தில் மாணவியை சேர்த்துள்ளார். கல்வி நிறுவனத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள விடுதியில் அந்த இயக்குனர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. நவம்பர் 2021இல் முதன்முறையாக அந்த மாணவியை வன்புணர்வு செய்துள்ளார் அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர். அப்பொழுது அந்த மாணவிக்கு 14 வயது. பின்னர் இரண்டு வருடம் அந்த மாணவியை பலமுறை வன்புணர்வு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை, மிரட்டியதும் மற்ற மாணவிகளுக்கு முன்பு கேலிக்கு உட்படுத்தியதும் தெரியவந்துள்ளது. தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அந்த மாணவியிடம் காண்பித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனது சொந்த ஊருக்கு பெற்றோருடன் சென்றபோது, தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் கல்வி நிறுவனத்தின் இயக்குனரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது, அவரது செல்போனில் இருந்து பல சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் மீட்கப்பட்டன. பல புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் அந்த சிறுமிகளுடன் அந்த இயக்குனரும் இருந்துள்ளார். அந்த சிறுமிகளும் இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி பயில வந்தவர்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பூனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

"இன்ஸ்டாகிராம் காதலின் லட்சணம்.."! 18 நபர்களால் கற்பழிக்கப்பட்ட '16' வயது மாணவி..!! அதிர்ச்சி சம்பவம்.!

Mon Feb 5 , 2024
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பள்ளி மாணவி 18 நபர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் நெருங்கி பழகி வந்த நிலையில் நிர்வாண புகைப்படங்களை பரிமாறி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் காதலன் நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை […]

You May Like