fbpx

புயல் எச்சரிக்கை..!! மக்களே ரெடியா..? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு..!!

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேவையான அளவு கிருமி நாசினி, நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜோவிகா வெளியேறியதற்கு முக்கிய காரணமே இதுதானாம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

Sat Dec 2 , 2023
இறுதிப் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோவிகா, இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். மக்கள் ஆதரவு அவருக்குக் குறைய என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக ஜோவிகா நுழைந்தார். ஆரம்பத்தில் வனிதாவின் மகள் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும் பிக்பாஸ் விளையாட்டை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு விளையாடினார். குறிப்பாக, கல்வி குறித்து இவர் முன்வைத்த விவாதங்கள் பார்வையாளர்கள் […]

You May Like