fbpx

திருநங்கையை காதலித்த கணவருக்கு மனைவி நடத்தி வைத்த திருமணம்… ஒரே வீட்டில் குடித்தனம்…!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்(32). இவர் மனைவி மற்றும் தனது இரண்டு வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த வருடம் சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு பழக்கமானார். நாளடைவில் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் பஹிர் தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின் மனைவி கண்டுபிடித்தார்.

இது பற்றி பஹிரிடம் அவரது மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி ஏற்றுக் கொண்டார். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். பஹிர் மனைவி இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் கோயில் ஒன்றில் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது பற்றி கூறுகையில்,:- இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்ததால் இது அபூர்வமான திருமணமாகும். இந்த திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் அவர்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்” என்று கூறினார்.

Baskar

Next Post

பள்ளி பேருந்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை .. அதிர்ச்சி சம்பவம்..

Tue Sep 13 , 2022
பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது சிறுமியை ஓட்டுனரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. மூன்றரை வயது நர்சரி பள்ளி மாணவி ஒரு பெண் உதவியாளர் முன்னிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. அந்த பெண் உதவியாளர் இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவியதாக கூறப்படுகிறது.. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் அடையாளங்களைக் கண்டு என்ன நடந்தது என்று […]

You May Like