fbpx

ஓசி பிரியாணி கேட்டு அடாவடியில் ஈடுபட்ட இரு நபர்கள்…! மது போதையில் வாகனத்தை அங்கேயே விட்டு,விட்டு ஓட்டம் பிடித்த காவலர்கள்….!

சென்னை டி நகர் அருகே இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் மத ரீதியாக இழிவாக பேசிய இரண்டு காவல்துறையினர், வீடியோவில் சிக்கியதால், வாகனத்தை அங்கேயே விட்டு,விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை டி நகர் சிவஞானம் தெருவில், உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் காசிம். இவர், நேற்று பிற்பகல் இவருடைய உணவு விடுதிக்கு வந்த இரண்டு காவலர்கள், பணம் தராமல், பிரியாணி கேட்டதால், அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதோடு, வியாபாரம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆகவே இலவசமாக தர இயலாது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அந்த காவலர்கள் இருவரும், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே, அந்த இரண்டு காவலர்களும் பின்பு அங்கிருந்து சென்று விட்ட நிலையில், இரவு மீண்டும் மதுபோதையில், அந்த ஓட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டனர்.

மது போதையில் இருந்த அந்த காவலர்கள் இருவரும், நன்றாக சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்க மறுத்து, கடை உரிமையாளரை, இனி கடையை நடத்த இயலாது எனவும், நீங்கள் அனைவரும் முஸ்லீம் தானே? தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக தானே கடை நடத்துகிறீர்கள்? என்று மத ரீதியாக கடையின் உரிமையாளரை அவதூறாக பேசியுள்ளனர்.

இவர்கள் பேசியதை அந்த ஹோட்டலில் இருந்த சிலர் வீடியோ எடுத்தனர். இதை கண்ட காவலர்கள் இருவரும், தங்களது இருசக்கர வாகனத்தை அந்த பகுதியிலேயே விட்டு,விட்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக, கடையின் உரிமையாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆகவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், விட்டு சென்ற இருசக்கர வாகனம், டி நகர் காவல் நிலையத்தில், பணியாற்றும் ஆனந்த் மற்றும் ஜெயபால் என்ற இரு காவலர்கள் எடுத்து வந்த இருசக்கர வாகனம் என்று தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் தான், மது போதையில் உணவு கேட்டு, தகராறில் ஈடுபட்ட காவல்துறையினரால், அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மேலும், இது தொடர்பாக, காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

’நக்மாவை வளைத்துப் போட்ட காமெடி கிங்’..!! ’சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரே’..!! யாருன்னு தெரியுதா..?

Wed Aug 16 , 2023
எப்போதுமே ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் தான் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறை கொண்ட விஷயங்களை போகிற போக்கில் தனது வசனத்தாலும், உடல்மொழியாலும் விதைத்து செல்லும் வித்தைக்காரர். ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாகவும், மருந்தாகவும் எப்போதுமே தனது பங்களிப்பை செய்து வருகிறார் கவுண்டமணி. இவர், நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். இதற்கிடையே, பல படங்களில் கவுண்டமணியின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். […]

You May Like