fbpx

“உன்னால ஒரு குழந்தை கூட பெத்துக்க முடியல” மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; விரக்தியில் மனைவி செய்த காரியம்..

தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, கடந்த ஆண்டு சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுஜாதா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. Msc., Mphil பட்டதாரியான சுஜாதா, தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும், குழந்தை இல்லை. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கணேஷ் தனது மனைவி சுஜாதாவை வேலைக்கு செல்ல கூடாது என கூறியுள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் படுத்துள்ளனர். வழக்கமாக அதிகாலையில் வீட்டின் முன் கோலம் போடும் சுஜாதா இன்று காலை போடவில்லை. இதனால், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வீட்டை தட்டியுள்ளனர். அப்போது, வீட்டின் வெளியறையில் படுத்திருந்த கணேஷ், உள்ளறையில் படுத்திருந்த சுஜாதாவை கதவைத் தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் சுஜாதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணேஷ், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் உள்ள நிலை கம்பில் சேலையில் தூக்கு போட்டு சுஜாதா பிணமாக தொங்கியுள்ளார்.

இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணேசிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள, இளைஞர் செய்த காரியம்..

Wed Oct 4 , 2023
கடலூர் அருகேயுள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் 26 வயதான வினோத்குமார். இவர் நத்தம்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் தன்பாலின காதலர்களாக வலம் வந்த நிலையில், திடீரென ‘நீ பெண்ணாக மாற வேண்டும்’ என அந்த இளைஞர் வினோத்குமாரை வற்புறுத்தியுள்ளார். மேலும், நீ பெண்ணாக மாறினால் தான் மற்றவர்களை போல நாம் கணவன் மனைவியாக வாழ […]

You May Like