TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
தூய்மை தமிழ்நாடு நிறுவனம் அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு அங்கீகரிப்பதற்காக தகுதி உடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் […]
சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும். 1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் […]
நாட்டில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை (மே 31, 2025) நிலவரப்படி, இந்தியாவில் 3395 கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில், கேரளாவில் அதிகபட்சமாக 1336 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளிகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-ஐத் தாண்டியது இதுவே முதல் முறை. மத்திய அரசு வெளியிட்டுள்ள […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, […]
ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது […]
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]
முடி என்பது ‘கெரட்டின்’ எனப்படும் ஒரு வகை புரதத்தால் ஆனது. இது நேரடியாக நம் உடலுக்குப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், முடியில் நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், சாயங்கள் அல்லது வெளிப்புறத் தூசுக்கள் படிந்திருக்கலாம். இவை உணவுடன் சேரும்போது, உணவின் தரத்தைக் கெடுத்து, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் வளர வாய்ப்பை ஏற்படுத்தலாம். சாப்பிடும்போது தற்செயலாக ஒரு முடி வாய்க்குள் சென்றுவிட்டால், அது அடி நாக்கிலோ அல்லது […]
கண்ணாடி வளையல்கள் ஒரு பெண்ணின் தோற்றத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுகின்றன. நிறமயமான வளையல்கள் அவள் உடை அணிகலனுடன் பொருந்தி அழகு கூட்டும். பல பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் மனதில் சந்தோஷம் மற்றும் நிறைவை அடைவார்கள். இது ஒரு கலாசார அனுபவமாகவும் இருக்கும். சில சமூகங்களில் கண்ணாடி வளையல்கள் அணிவது திருமணமான பெண்களுக்கு மரியாதையை குறிக்கிறது. இது ஒரு குடும்ப மரபையும் காட்டும்.பல நிறங்களில் வளையல்கள் கிடைப்பதால், ஒவ்வொரு […]
இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றாலே மாத்திரைகளை எடுத்துகொள்வது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம். மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது […]