fbpx

இண்டிகோ விமானத்தின் கழிவறையில் இளம் பெண் செய்த செயல்! தரை இறங்கியதும் கைது செய்த காவல்துறை !

பறக்கும் விமானத்தின் கழிவறையில் பெண் ஒருவர் செய்த செயலால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் கழிவறையில் சிகரெட் பிடிப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து வெளியே வந்தார் பிரியங்கா சக்கரவர்த்தி என்ற பயணி. அதன் பிறகு கேபின் குழுவினர் கழிவறையை சென்று சோதித்துப் பார்த்தபோது சிகரெட் துண்டு ஒன்று அணையாமல் குப்பை தொட்டியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி சிகரெட் துண்டை அனைத்த விமான பணிப்பெண்கள் கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பிரியங்கா சக்கரவர்த்தியை ஒழுக்கமற்ற பயணியாக அறிவித்த கேப்டன் பெங்களூர் விமான நிலைய பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் விமானத்தின் கழிவறையில் புகை பிடித்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக பிரியங்கா சக்கரவர்த்தியை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது இபிகோ 336 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Baskar

Next Post

அலமாரியில் மம்மியாக மாறிய டாடி! அதிர்ச்சியில் மனைவி மற்றும் காவல்துறை!

Thu Mar 9 , 2023
அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை எட்டு மாதங்கள் கழித்து வீட்டின் அலமாரியில் சடலமாக கண்டிருக்கிறார் மனைவி இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் பகுதியைச் சார்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ். 53 வயதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ரிச்சர்ட் […]

You May Like