fbpx

திருச்சி: திடீரென மாயமான இளம் பெண்.! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன.?

திருச்சி மாவட்டத்தில் கடன் தொல்லையால் இளம் பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா மனோன்மணி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இவருக்கு பணப் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது இதன் காரணமாக அதிக கடன் தொல்லையில் இருந்திருக்கிறார் .

வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ரீட்டா. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்ற அவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களிலும் அவரை தேடி இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரீட்டா மனோன்மணியின் சகோதரர் வில்சன் தனராஜ் தனது தங்கை மாயமானது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காணாமல் போன ரீட்டா மனோன்மணியை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையால் இளம் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ரூ.1,500 முதலீடு செய்து ரூ.35 வரை வருமானம் பெறுங்கள்..!! அரசின் சூப்பர் திட்டம் இதோ..!!

Wed Dec 27 , 2023
தற்போது அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணம் குறைந்த ரிஸ்க்குடன் அதிக வருமானத்தை தருகிறது. இது போன்ற திட்டத்தை தற்போது பார்க்கலாம். கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்திய இந்திய அஞ்சல் துறை, இப்போது கிராமப்புற திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம் சுரக்ஷா யோஜனா அல்லது கிராம பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் மாதம் ரூ.1,500 டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்கள் ரூ.31 லட்சம் முதல் ரூ.35 […]

You May Like