இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ரயிலில் நகைகள் அல்லது முதலீட்டு தங்கத்தை எடுத்துச் செல்லும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த விதிகளை மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடலாம். இந்திய ரயில்வே விதிகளின்படி, தங்கம் என்பது சிறப்புப் பொருளாக கருதப்படாமல், பயணிகளின் மற்ற […]

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 22 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrip) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் பார்மா (Srisan […]

AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான […]