நவராத்திரி திருநாளில் ஆறாவது நாளில் வழிபடும் சக்தியின் மறு உருவமாக திகழ்ந்துவரும் கடவுள்தான் காத்யாயனி. துர்கா தேவி எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்தவகையில் இந்த காத்யாயினி வடிவம் பல கைகளோடு இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது, காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படுகிறது. இது அமரகோசம் என்ற சமஸ்க்ருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது […]

இந்த ஆண்டு இந்தியாவுடனான இராணுவ மோதலில் பாகிஸ்தான் விமானப்படை ஏழு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். தனது நாட்டின் விமானப்படையைப் பாராட்டிய ஷெரீப், அதன் விமானிகளை “பருந்துகள்” என்று குறிப்பிட்டு, அவர்கள் பறந்து சென்று இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறினார். பாகிஸ்தான் முன்பு ஐந்து இந்திய விமானப்படை விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது, ஆனால் இந்தியா […]

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வறுமையை குறைத்து தொழில்முனைவோராக ஊக்குவிக்க, சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் நலிவடைந்த பழங்குடியினர் போன்றோரையும் இந்த இயக்கம் உள்ளடக்கியுள்ளது. ரூ. 40,000 கடன் உதவி : […]

தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் திட்டம், கல்லூரிப் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உறுதித் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், பெண் கல்வியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது, தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் இரண்டிலும் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி […]

பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மையக்கரு என்று கூறி, ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தானின் பொய்களை இந்தியா அம்பலப்படுத்தியது. பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவதும் கௌரவிப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள […]

பொதுவாக, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநல பிரச்சனைகள் வரை பல உடல்நலக் கோளாறுகளுடன் குடல் நேரடியாகத் தொடர்புடையது. இதுகுறித்து எய்ம்ஸ், ஹார்வர்டு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடல் அமைப்பைச் சிறப்பாக செயல்பட வைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். கழிப்பறைப் பழக்கமும், மூலநோயும் : கழிப்பறையில் […]

திருப்பதி திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏழுமலையானை மனதார வழிபடும் இந்த பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது. திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா நித்யான்ன பிரசாத கேந்திரா மூலமாக தினமும் சுமார் 60,000 முதல் 70,000 பேருக்கு அரிசிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடம், பழைய அன்னதான வளாகம், பிஏசி-2, ரம்பாகிச்சா பேருந்து நிலையம், […]

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருள்மிகு பண்ணாரியம்மன். இந்த பண்ணாரியம்மன் கோவில், பக்தர்களுக்கு திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணையே பிரசாதமாக வழங்கும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மலைகளுக்குள் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்று மண், சுயம்பு அம்மனிடத்தில் பூஜை செய்யப்பட்டு, சக்தி வாய்ந்த திருநீறாக வழங்கப்படுகிறது. பண்ணாரியம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது, வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மையாகும். […]

தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் […]