உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]

தங்கம் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். எந்தவொரு சிறிய விழாவிற்கும் தங்கம் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை வாங்குவதற்காக நீண்ட காலமாக பணத்தை சேமித்து வைப்பவர்கள் கூட இருக்கிறார்கள். இந்து மதத்தில், தந்தேராஸ், குரு புஷ்ய யோகம், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தங்கம் வாங்கும் பாரம்பரியம் பழமையானது. மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்க […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]

கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு […]

வரும் ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்; பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறந்த நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் […]

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் […]

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஒரு பெரிய பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்தை ஈரான் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு ஈரான் இந்த நடவடிக்கையை […]

பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட்டில் நேற்று மாலை 4 மணியளவில் அந்தப் பெண் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது, ​​5 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரைத் தடுத்தது. சில ஆண்கள் […]

ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் […]

ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தல் ப்ரீபெய்டு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். இதில் ஜியோ-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 90 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. OTT பயனர்கள் மற்றும் தினசரி ஸ்ட்ரீமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், […]