காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருவதாகவும், முதல்வர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் என்பதால் தான் அவர் அமைதி காப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், முதல்வர் விஜய் எப்போது இது குறித்துப் பேசுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், இக்கூட்டம் தேவையில்லை எனக் கூறிய […]

நவகிரகங்களில் சுப யோகத்தையும் மங்களத்தையும் வாரி வழங்கும் நாயகனாக திகழ்பவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரப்படி ஞானம், கல்வி, கூர்மையான அறிவு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு முதன்மை காரணியாக இவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்புமிக்க குரு பகவான் கடந்த ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமாகி தனது பயணத்தை தொடர்ந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் உதயமாகவுள்ளார். குரு […]

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள நல்லட்டிபாளையம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் […]

தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க முதன்மை பண்டிகைகளில் ஒன்றான ‘ஆடிப்பெருக்கு’ திருநாள் இன்று மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இயற்கையின் கொடையையும், ஜீவநதிகளையும் போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு, பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் நிறைந்து வழிவதை கொண்டாடும் ஒரு முதன்மையான நன்னாளாகும். வரலாற்று ரீதியாக புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கமாக விளங்கும் இந்நாளில், நல்ல மழைப்பொழிவு, வளமான நிலம் மற்றும் நல்விளைச்சலுக்காக விவசாயிகள் காவிரித் தாய்க்கும் நீர் தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகளை […]

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஷிவ்மோகா மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனால், மலைப்பகுதிகளில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஷிவ்மோகா மாவட்டம் மலநாடு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொட்டகையின் மீது மண் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். எனினும், அந்தக் கொட்டகையில் வசித்து […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் […]

இந்தோனேசியாவில் 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயங்கரக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 41 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சுராபாயாவில் (Surabaya) இருந்து தெற்கு சுலாவெசியில் அமைந்துள்ள மக்காசார் (Makassar) நகரை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட […]

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு கட்டமாக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் களமிறங்கிய அமைச்சர் […]

பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை குறுபம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (45), அவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமன் (35) ஆகியோர் காரில் […]

அன்றாட அவசரமான வாழ்க்கை சூழலில் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை கண்டுகொள்வதே இல்லை. குறிப்பாக, வேலைப் பளு காரணமாகச் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்கும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், இந்த அலட்சியப் போக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என வனபர்த்தி அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் எச்சரித்துள்ளார். பொதுவாக, கழிவுகள் நிரம்பும்போது சிறுநீர்ப்பை விரிவடைந்து, சிறுநீர் கழித்தவுடன் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் […]