சென்னை பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் அறிவித்துள்ள முடிவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அற்ப அரசியல் லாபங்களுக்காக தமிழகத்தின் தொலைநோக்கு நலன்களை அடகு வைக்கக் கூடாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கவோ தங்களது கருத்துகளைப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞரால் ஏற்பட்ட தொடர் தொல்லை, கர்நாடகாவில் 22 வயது பெண்ணின் உயிரிழப்பில் முடிந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சிவமொக்கா பகுதியில் உள்ள பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வாணிஸ்ரீ (22). கல்லூரிப் படிப்பை முடித்த இவர், பெங்களூருவின் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கல்லூரியில் படித்தபோது அபிஷேக் […]
அமராவதி மாவட்ட மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 6 குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையின் மகளிர் மருத்துவமனையில் இன்று ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த சம்பவம் […]
புற்றுநோய் சிகிச்சையால் முடியை இழக்கும் நோயாளிகளுக்கு, அந்தப் பாதிப்பு உடலோடு மட்டுமின்றி மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக விலை உயர்ந்த இயற்கை முடி விக்குகளை வாங்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், இலவசமாக உயர்தர விக்குகளை வழங்கும் புதிய திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. டாடா மெமோரியல் சென்டர் மற்றும் செரியன் ஃபவுண்டேஷன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பொருளாதார […]
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோன் வரிசையின் அறிமுகத் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், கியூபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி iPhone 18 Pro அறிமுக விழா நடைபெறக்கூடும் எனப் பல்வேறு தொழில்நுட்ப அறிக்கை கசிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இத்துடன் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone) பற்றிய அறிவிப்பும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது செப்டம்பர் 8-இல் நடக்கலாம் […]
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி விளக்கப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் முகமது பர்வேஸ் பேசிய நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் எதிர்பாராத வகையில் பேசுபொருளாகியுள்ளன. திட்டங்களின் சாதனைகளை விளக்கிக் கொண்டிருந்த அமைச்சர், நிதி தொடர்பான தொகைகளை அடுத்தடுத்து குறிப்பிட்டபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் குழம்பியதுடன் சிரிப்பையும் வெளிப்படுத்தினர். தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், அக்கட்சியினர் […]
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தன்னிடம் ரூ.2 கோடி இருப்பதாக கூறினால் தனது தாயே அதை நம்பமாட்டார் என தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை வெறும் ரூ.12 லட்சத்தை வைத்தே சந்தித்ததாகவும் அவர் கூறினார். ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு […]
சென்னை, ஆக 22 : உணவகத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில், பிரபல இஸ்லாமிய பேச்சாளரான அப்துல் பாசித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈ.சி.ஆர் அக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் அகமது என்பவர், நீலாங்கரையில் உள்ள “ரூஹி உணவகத்தை நடத்தி வந்த அப்துல் பாசித்துடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். பிரபல பேச்சாளராகவும் சமூகத்தில் மதிப்பிற்குரிய […]
திருச்சி: தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக், முதல்வர் விஜய்யை “வருங்கால பிரதமர்” என அமைச்சர்கள் புகழ்ந்து பேசுவது தேவையற்றது என்று விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து போதிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டினார். விவாதங்களை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் […]
புற்றுநோய் என்றாலே வயது முதிர்ந்தவர்களுக்கே ஏற்படும் நோய் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. ஆனால், இந்தியாவில் 30 வயதுகளிலும் 40 வயதின் தொடக்கத்திலும் உள்ளவர்களிடையே புற்றுநோய் கண்டறியப்படும் சம்பவங்கள் குறித்த கவனம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், இளம் வயதினரிடையே உண்மையாகவே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறதா அல்லது மருத்துவ விழிப்புணர்வு மற்றும் நவீன பரிசோதனை முறைகளால் முன்பு கண்டறியப்படாத பாதிப்புகள் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. […]

