இமயமலைப் பகுதியில் ஏற்படும் ஒரு சிறிய அளவிலான உயர்மலை பேரிடர்கூட அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி, கீழ் பகுதியில் மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம் உள்ளது. பனிச்சரிவு, நிலச்சரிவு அல்லது பனிப்பாறை உடைதல் போன்ற ஒரு நிகழ்வு ஆறுகளின் போக்கைத் தடுத்து, திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுப்பெருக்கை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம். நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர், இத்தகைய தொடர்ச்சியான பேரிடர் சங்கிலியின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இந்திய கடலோரப் பகுதிகளில் புயல் செயல்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 3 வெப்பமண்டல புயல்கள் உருவாகக்கூடும் என இஸ்ரோ மேற்கோள் காட்டியுள்ள வானிலை மதிப்பீடு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உருவாகக்கூடிய புயல்களின் ஒட்டுமொத்த தீவிரம், கடந்த 44 ஆண்டுகளின் சராசரியைவிட சுமார் 83 […]
கேரளாவைச் சேர்ந்த 30 வயது ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. துயரமான நேரத்திலும் உறுப்பு தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தினரின் மனிதநேய முடிவுக்கு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொல்லம் மாவட்டம் கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த ராகுல் ராஜீவ், இமாச்சலப் பிரதேசத்தில் ராணுவப் பணியில் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்காக 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரகசிய உளவுத்துறை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா அமைப்பு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை தாக்குதலுக்கான இலக்குகளாக பரிசீலித்திருந்த தகவல் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அமெரிக்க உளவு அமைப்பான CIA பல்வேறு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. 9/11 தொடர்பான 71 உளவுத்துறை அறிக்கைகள் […]
வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது சில எண்களும் தேதிகளும் மக்களின் மனதில் அச்சத்தையும் பலத்த விவாதங்களையும் ஒருசேர விதைத்து விடுகின்றன. அந்த வகையில் இந்தியத் துணைக்கண்டத்திலும் உலகளவிலும் ’26’ என்ற தேதி மீண்டும் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது கட்ச் பகுதியைச் சிதைத்த 2001 குஜராத் நிலநடுக்கம் (ஜனவரி 26), லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய 2004 ஆசிய சுனாமிப் பேரலைகள் (டிசம்பர் 26), […]
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.3,000 ரொக்கப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான முடிவு குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், கடந்த ஆண்டைப் போலவே இந்த பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மக்களின் நலனுக்கான […]
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,000 பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்கள் தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் மற்றும் […]
தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், இடைத்தேர்தலை மையமாக வைத்து சிபிஎம் நிர்வாகி சண்முகம் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. இடைத்தேர்தல் முடிவை வைத்து ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு அல்லது எதிர்ப்பை நேரடியாக கணிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடாக பார்க்கக் கூடாது என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் தங்களது […]
இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் ஜாவா கடலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் திடீரென தகவல் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலைத் தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று தொடங்கியுள்ளனர். கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகரான பஞ்சர்மசினை நோக்கி Virgo Transport 8 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. ஜாவா கடலில் பஞ்சர்மசின் […]
சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தாரி பாலம் அருகே இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலைக்குச் சென்று அங்கு வந்த 2 கார்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நவி மும்பை நேருல் பகுதியைச் சேர்ந்த ஆனந்திபாய் ராமச்சந்திர வட்கர் (50) […]

