உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தரமௌலி என்ற சந்துரு எஸ்(38). இவருடைய தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகனை லோகேஷ் மணி, விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கொலை செய்து கொன்று விட்டாதாக புகாரில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புகாரில் அவர் கூறியதாவது , ” ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஏற்பட்ட சின்ன ஒரு சண்டையில் […]

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் 4 பெண்கள் சேர்ந்து நிலை தடுமாறிய குடிபோதையில் அருகில் இருந்த மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக வைரலாகி வருகின்றது. இந்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 4) அன்று நள்ளிரவு 1 மணி அளவில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த 4 பெண்களும் மது போதையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் முடியை பிடித்து […]

நவ. 11ஆம் தேதி 10 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (நவ.9) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 625 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,553 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் […]

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் […]

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Director RSETI பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.25,000 ஊதியம் […]

ஒடுகத்தூர் அருகே இரவில் பஸ்சுக்கு காத்திருந்த கல்லூரி மாணவியை வாழைத்தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் அணைக்கட்டு அருகே உள்ள தார்வழி பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே, ஒடுகத்தூர் அருகே 17 வயது இளம்பெண் அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு படித்து […]

இன்ஸ்டா ரீல்ஸுக்கு அடிமையான பெண் ஒருவர் சினிமா வாய்ப்புத்தேடி சென்னை சென்று திரும்பிய நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சித்ரா, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். உடன் வேலைப்பார்பவர்களும், […]

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் (Capacitors) […]

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் […]